இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
இந்தியன் 2 உள்பட சில படங்களில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்த முடித்த பிறகு நடிப்புக்கு சில காலம் காஜல் அகர்வால் முழுக்குப்போட போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியானது. ஆனால் அதை உடனடியாக மறுத்த காஜல் அகர்வால், தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் தான் ஒரு சிவபெருமானின் தீவிரமான பக்தை என்று கூறியிருக்கிறார். அதன் காரணமாகவே என் மகனுக்கு சிவபெருமானின் பெயரை சூட்டினேன். அதாவது சிவபெருமானின் மற்றொரு பெயர் நீலகண்டன். அதில் உள்ள முதல் இரண்டு எழுத்துக்களை தேர்வு செய்து, நீல் என்று என் மகனுக்கு பெயர் சூட்டினேன் என்று தனது மகனின் பெயருக்குள் மறைந்திருக்கும் நீலகண்டனை வெளிச்சம் போட்டுள்ளார் காஜல் அகர்வால்.