மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தற்போது இயக்குனர் கொரடலா சிவா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சைப் அலி கான் நடிக்கிறார். யுவசுதா ஆர்ட்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர் என்டிஆர் அப்பா, மகன் என்று இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இந்த நிலையில் இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் தலைப்பை வருகின்ற மே 20ல் ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் அன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு தேவாரா என்று தலைப்பு வைத்துள்ளதாக சொல்கிறார்கள்.




