காதலாகி, கசிந்துருகி… பிரிவாகி… - தமிழ் சினிமா பிரபலங்களின் பிரிவுகள் | யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ்? | ஜூன் 1ல் ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா | மே. 24ல் வெளியாகும் பி.டி. சார் | 'கில்லி' - 25 நாளில் இத்தனை கோடி வசூலா ? | இரண்டே நாளில் அஜித்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? | கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குகிறேனா? - நடிகர் பாலா அதிரடி பதில் | சூர்யா படத்தில் ஹாலிவுட் பைட் மாஸ்டர் | தெலங்கானாவில் 10 நாட்களுக்கு தியேட்டர்களை மூட முடிவு | சைந்தவி உடனான பிரிவை வைத்து விவாதம் : தமிழர் மாண்பு குறைந்து விட்டதா என ஜிவி பிரகாஷ் ஆதங்கம் |
கடந்த 2013ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக ஆன திரைப்படம் சூது கவ்வும். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதில் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா,சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் சூது கவ்வும் 2ம் பாகத்தை உருவாக்க தயாரிப்பாளர் சி.வி.குமார் முடிவு செய்துள்ளார். எம்.எஸ்.அர்ஜுன் இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படம் யங் மங் சங் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடிக்கவுள்ளார். சத்யராஜ், கருணாகரன், ராதாரவி, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடிப்பார் என கூறுகின்றனர். படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 17 அன்று துவங்குகிறது.