கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
பிரபல மிமிக்கிரி ஆர்ட்டிஸ்ட் கோவை குணா(54), உடல்நலக்குறைவால் கோவையில் காலமானார். சின்னத்திரை நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு, அசத்தபோவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பல குரல்களில் பேசி ரசிகர்களை கவர்ந்தவர் குணா. கோவையை சேர்ந்த இவர் கோவை குணா என்றே அழைக்கப்பட்டார்.
சின்னத்திரை மட்டுமல்லாது ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார். குறிப்பாக நடிகர்கள் கவுண்டமணி, ஜனகராஜ் போன்றவர்களின் குரலையும், அவர்களது உடல் மேனரிசத்தையும் அப்படியே வெளிப்படுத்தும் திறமைப்படைத்தவர்.
கோவை மாவட்டம், சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். நீரிழிவு நோய் காரணமாக சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் கடந்த ஓராண்டாக கோவை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையின் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு இன்று(மார்ச் 20) உயிரிழந்தார்.
குணாவின் பழைய மிமிக்கிரி காமெடி வீடியோக்களை பகிர்ந்து அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.