சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'கண்ணும் கண்ணும் கொள்யைடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், சிம்பு நடிக்க உள்ள அவரது 48வது படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படம் பற்றிய அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
சரித்திரப் படமாக உருவாக உள்ளதாக சொல்லப்படும் இப்படத்திற்காக 100 கோடி ரூபாயை பட்ஜெட்டாக ஒதுக்கியுள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயம் சிம்புவிற்கு மட்டுமே சம்பளமாக 40 கோடி தருகிறார்கள் என்றும் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். சிம்பு அவ்வளவு சம்பளத்தைக் கேட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது கூடுதல் தகவல்.
அதிகபட்சமாக 10 கோடி மட்டுமே வாங்கிய சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்திற்குப் பின் தனக்கு யார் அதிக சம்பளம் தருகிறார்களோ அவர்களது படத்தில் நடிக்க முடிவெடுத்ததாகச் சொல்கிறார்கள். சிம்புவிற்கு மட்டுமே 40 கோடியைக் கொடுத்துவிட்டு மீதியுள்ள 60 கோடியில் எப்படி சரித்திரப் படத்தைத் தயாரிக்க முடியும் என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.