ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இடைவிடாத பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்குள்ள மீடியாக்கள் அவரிடத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கையில், ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையும் போது மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதோடு என்னை பொருத்தவரை ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிய பிறகு அதற்கு உரிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன். நடிகர்களை கருத்தில் கொண்டு கதைகளை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.