தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? | தாய் கிழவி : சிங்கம் புலி நடிப்பை பாராட்டிய கமல் | தெலுங்கு, தமிழ் கலாசாரத்துடன் இணைந்திருக்கிறேன்! ஜான்வி கபூர் | போர் முழக்கம் : வடிவேலுவின் புதிய படம் | கமல் - ரஜினி இணையும் படம் குறித்து அனிருத் வெளியிட்ட அப்டேட்! | விஜய் சேதுபதியை இயக்கும் அஜித் பட இயக்குனர்! | போர் சூழல் : டாக்சிக் ரிலீஸ் ஜூன் 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு | ‛காற்றின் மொழி' இசையில்.... : ‛மெலோடி கிங்' வித்யாசாகர் பாடல்களை மறக்க முடியுமா? | பிளாஷ்பேக்: ராஜாஜி பாராட்டிய சிவாஜிகணேசன் | சிகரெட், மதுவை தொட்டதில்லை: சதீஷ் பெருமிதம் |

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இடைவிடாத பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் மும்பையில் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அங்குள்ள மீடியாக்கள் அவரிடத்தில் ஷாருக்கானுடன் மீண்டும் எப்போது இணைவீர்கள்? என்று ஒரு கேள்வி கேட்டார்கள். அதற்கு மணிரத்னம் பதிலளிக்கையில், ஷாருக்கானுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட் அமையும் போது மட்டுமே அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதோடு என்னை பொருத்தவரை ஒரு ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணிய பிறகு அதற்கு உரிய நடிகர் நடிகைகளை தேர்வு செய்வேன். நடிகர்களை கருத்தில் கொண்டு கதைகளை உருவாக்குவதில்லை என்று கூறியுள்ளார் மணிரத்னம்.




