சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தமிழ், தெலுங்கில் சில பல படங்களில் நடித்து பின்னர் தயாரிப்பாளராக மாறியவர் சார்மி கவுர். தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல இயக்குனரான பூரி ஜெகன்னாத் உடன் இணைந்து படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அவர்களது சமீபத்திய தயாரிப்பான 'லைகர்' படம் படுதோல்வியைச் சந்தித்தது.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களை விட்டு தற்காலிகமாக விலகுவதாக பதிவிட்டிருந்தார். மீண்டும் தங்களது தயாரிப்பு நிறுவனம் மீண்டு வரும் அன்று அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் 'லைகர்' தோல்விக்கு பல கோடிகளைத் தருகிறார்கள் என்றும், அவர்களது அடுத்த படமான 'ஜனகனமண' தயாரிப்பிலிருந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் விலகியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து இன்று மீண்டும் சமூக வலைத்தளங்கள் பக்கம் வந்து, “வதந்திகள், வதந்திகள், வதந்திகள், அனைத்து வதந்திகளும் பொய்யானவை. பூரி கனெக்ட்ஸ் முன்னேற்றத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வதந்திகளுக்கு ஆழ்ந்த இரங்கல்” எனப் பதிவிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களை விட்டு விலகுவதாகச் சொல்லியபின் வெளிவந்த வதந்திகளுக்கு பதிலளிக்க சார்மி மீண்டும் வந்துள்ளார். அடுத்தடுத்து இப்படி பல செய்திகள் வந்தால் ஒவ்வொரு முறையும் வந்து பதிவிட்டு செல்வாரோ ?.