தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

2010ம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி நாயகனாக நடித்த ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ரீமா சென்னுக்கு தமிழில் டப்பிங் கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு எந்த படங்களுக்கும் டப்பிங் கொடுக்காத அவர், 12 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். அப்படி தான் டப்பிங் பேசும் வீடியோ, புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு தமிழ் படத்திற்காக டப்பிங் பேசியுள்ளேன். இது தண்ணீருக்குள் மீன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பது போன்ற ஒரு சந்தோஷத்தை எனக்கு கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.