ஹிந்தியில் 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பு நிறைவு | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்கள் மீது நீதிமன்றத்தில் 1000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் | மோகன்லால் படம் நிறுத்தப்பட்டதாக வெளியானது தவறான தகவல் ; இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் பற்றிய விமர்சனம், 'பெத்தி' இயக்குனர் விளக்கம் | ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? |

கடந்த 2019ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது. இதில் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிட்டனர். இந்தத் தேர்தலில் ஓட்டுப்பதிவு கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. அதில் விஷால் பாண்டவர் அணி வெற்றி பெற்றனர். நாசர் தலைவராகவும், விஷால் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பொறுப்பேற்றுள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர், கார்த்தி, பூச்சி முருகன் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் இன்று சந்தித்து பேசியுள்ளனர். நடிகர் சங்க கட்டடம் மற்றும் பல்வேறு விஷயங்களை அவருடன் பேசியுள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.