அடுத்தடுத்து திரைக்கு வரும் திரிஷா படங்கள் | மார்ச் 12ல் வெளியாகும் மேட் இன் கொரியா | தெலுங்கில் பிஸியாகும் ருக்மணி வசந்த் | சர்வதேச விருதினை வென்ற ‛பூங்' படக்குழுவை பாராட்டிய பிரதமர் மோடி | திரிஷ்யம் 3 படத்தில் நடிக்க மறுத்த வெங்கடேஷ் | 20 ஆண்டுகளுக்கு பின் தென்னிந்திய படத்தில் சஞ்சீதா ஷேக் ரீஎன்ட்ரி | மீண்டும் இணையும் ‛மை லார்ட்' கூட்டணி | புருஷன் படப்பிடிப்பு துவங்கியது | உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' |

சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி பரபரப்பில் சிக்குபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா.. சமீபகாலமாக கருத்து கூறுவதை குறைத்துக் கொண்டு மீண்டும் படம் இயக்குவதில் பிசியாக இறங்கியுள்ளார். பெரும்பாலும் இந்தி மற்றும் தெலுங்கு படங்களையே இயக்கி வந்த ராம்கோபால் வர்மா அடுத்ததாக கன்னடத்தில் உபேந்திரா ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ஆர் என ஒற்றை எழுத்தில் டைட்டிலும் வைத்துள்ளார்.
கேங்ஸ்டர் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்ற இவர், இந்தப்படத்தையும் அதே ஜானரில் தான் இயக்குகிறார். உபேந்திராவின் கதாபாத்திரம் பற்றி கூறும்போது, “யாருக்கும் பயப்படாத இந்த ஆர் பெங்களூரில் பிறந்து மும்பை சென்று அன்டர்வோர்ல்ட் தாதாவாக மாறியவன்.. தாவூத் இப்ராஹீம் கூட தானாகவே ஆர் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் இருந்தார். அதுமட்டுமல்ல, துபாயில் உள்ள டி கம்பெனிக்கு பல உதவிகளை செய்தவன் தான் இந்த ஆர்' என குறிப்பிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா.