கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழில் ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா மேனன். அதுமட்டுமல்ல தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நடிக்கும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து கிடைத்த இடைவெளியில் ஓய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா பறந்துவிட்டார் சம்யுக்தா மேனன். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்வது, கங்கை நதியில் நீராடுவது என்பது இவரது கனவாகவே இருந்து உள்ளது. தற்போது உத்தரகாண்ட் பகுதியில் விடுமுறையை கொண்டாடிவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா மேனன் கூடவே தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடும் கங்கை நதியின் சலசலப்பை கேட்க முடிகிறது. இமயமலையில் இருந்து வீசும் தென்றல் என்னை வருடுகிறது. இதற்கு முன் நான் இங்கே இருந்து இருக்கிறேன்.. இங்கேயே வாழ்ந்து இருக்கிறேன் என்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. என் சிறுவயது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார் சம்யுக்தா மேனன்.