ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஓட்டுப்பதிவு 30 ஆயிரத்து 735 மையங்களில் இன்று(பிப்., 19) காலை 7 மணிக்கு துவங்கியது. நடிகர் விஜய் சென்னை, நீலாங்கரை பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டுபதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து ஓட்டளித்தார். விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் கூடியதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து ஓட்டுப்போட்டுவிட்டு வந்த விஜய், தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரலானது.
கடந்தமுறை சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து ஓட்டளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் விஜய் இன்று, சிவப்பு நிற மாருதி காரில் வந்து ஓட்டளித்து சென்றார்.
![]() |




