ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஹிந்தித் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி மும்பையில் தனது 69வது வயதில் காலமானார். அவரது மறைவு ஹிந்தித் திரையுலகினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தான் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்து இந்தியத் திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்தார். அதற்குள் மற்றொரு சோகமாக பப்பி லஹரி மறைவு நிகழ்ந்துள்ளது.
ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பப்பி லஹரி பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழில் 1983ம் ஆண்டில் வெளிவந்த 'அபூர்வ சகோதரிகள்', 1985ல் வெளிவந்த 'பாடும் வானம்பாடி', 1987ல் வெளிவந்த 'கிழக்கு ஆப்ரிக்காவில் ஷீலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
'அபூர்வ சகோதரிகள்' படத்தில் 'எங்கெங்கே நீதான்..நான் அங்கங்கே…, அன்னை என்னும் ஆலயம்….,' ஆகிய பாடல்கள் அப்போது சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தன. ஹிந்தியில் மிதுன் சக்கரவர்த்தி நடித்து 1985ல் வெளிவந்த 'டிஸ்கோ டான்சர்' படம் தமிழில் ஆனந்த பாபு நடிக்க 'பாடும் வானம்பாடி' என ரீமேக் ஆனது. ஹிந்தியில் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது போல தமிழிலும் சூப்பர் ஹிட்டானது.
குறிப்பாக 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்' பாடல் அந்தக் காலத்தில் பள்ளி, கல்லூரி ஆண்டு விழாக்களில் கண்டிப்பாக இடம் பெற்ற ஒரு பாடலாக இருந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற மற்றொரு பாடலான 'வாழும் வரை போராடு' ஒரு தன்னம்பிக்கைப் பாடலாக ஒலித்தது. படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களும் ஹிட் பாடலாக அமைந்ததால் தமிழிலும் படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
பப்பி லஹரி தமிழில் இசையமைத்தது மூன்று படங்கள்தான் என்றாலும் அவரது இசையால் இங்கும் முத்திரை பதித்தார் என்பதை மறக்க முடியாது.