‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன் ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா' படம் கடந்த மாதம் டிசம்பர் 17ம் தேதி வெளியானது. தெலுங்கில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தை தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டனர்.
தமிழகத்தில் மட்டும் இந்தப் படத்தின் வசூல் 25 கோடியைத் தாண்டிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு டப்பிங் படம் நேரடி தமிழ்ப் படங்களை விட இவ்வளவு வசூலித்தது கடந்த வருடத்தின் ஆச்சரியங்களில் ஒன்று. இந்தப் படம் ஹிந்தியிலும் 60 கோடி வசூலைத் தொட்டுவிட்டது. அங்கும், நேரடி ஹிந்திப் படமான '83' படத்தின் வசூலை விட 'புஷ்பா' வசூல் அதிகம்.
தயாரிப்பு நிறுவனமே படத்தின் வசூல் உலகம் முழுவதும் 300 கோடியைத் தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளது. இப்படத்தின் மூலம் பிரபாஸுக்குப் பிறகு அல்லு அர்ஜுனும் பான்-இந்தியா ஸ்டாராக உயர்ந்துவிட்டார். அதனால், 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ளார்களாம்.




