ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கபீர்கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா மற்றும் பலரது நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 83. 1983ம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் உலகக் கோப்பையை வென்றதுதான் இந்தப் படம். பெரும் அளவில் வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் முதல் வார இறுதியில் 50 கோடி வசூலைக் கூடக் கடக்கவில்லை என்பது பாலிவுட்டில் இருந்து வரும் வருத்தமான தகவல்.
இப்படத்திற்கு தற்போது ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். அது குறித்து, “83, வாவ்…. என்ன ஒரு படம்…. அற்புதம்… தயாரிப்பாளர்களுக்கும், கபீர்கான், கபில்தேவ், ரன்வீர் சிங், ஜீவா மற்றும் அனைத்து குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார். ரஜினியின் பதிவிற்கு 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
இப்படி பல பிரபலங்கள் ஏற்கெனவே பாராட்டினாலும் படத்திற்குக் கிடைக்கும் வசூல் அதிகமாகாமல் இருப்பது. படக்குழுவிற்குக் கவலை அளித்துள்ளது.