தொடர்கிறது…. மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் கூட்டணி | 'காந்தாரா' தயாரிப்பாளர், ரிஷப் ஷெட்டி இடையே மோதல்? | இசையமைப்பாளரான இயக்குனர் : நடிகரான பிரபுதேவா மகன் | துணிச்சலான காவல்துறை அதிகாரி வேடத்தில் சம்யுக்தா! | ஓடிடியில் வெளியானது அர்ஜுனின் சீதா பயணம்! | யோகி பாபுவின் 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தின் டீசரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! | 'துரந்தர் தி ரிவெஞ்ச்' மற்ற மொழி தணிக்கை தாமதம் | இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்; ஒரு பார்வை..! | பிளாஷ்பேக்: ப நீலகண்டனை படவுலகிற்கு அழைத்து வந்த “நாம் இருவர்” | கன்னட படத்தை தமிழில் ரீமேக் செய்கிறாரா சிவகார்த்திகேயன்? |

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். கடந்த அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணம் அடைந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கும் முயற்சிகள் தொடங்கி உள்ளன. புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை பல இளைஞர்களுக்கு முன்னோடியானது, நடிப்பு மட்டுமல்லாமல் மனிதாபிமானம், சமூக சேவை, கண்தானம், கல்வி உதவி என பல தளங்களில் அவர் பணியாற்றினார். எனவே அவரது வாழ்க்கை திரைப்படமாக தயாராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்துள்ள கன்னட சினிமாவின் முன்னணி இயக்குனரான சந்தோஷ் ஆனந்த்ராம், புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை திரைக்கு கொண்டு வர என்னால் இயன்ற முயற்சிகளை செய்வேன் என்று கூறியிருக்கிறார். இவர்தான் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடைசியாக வெளியான யுவரத்னா படத்தை இயக்கியவர். வேறு சிலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.




