சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு யாமிலி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 படங்களில் நடித்தார். தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக படங்களில் நடித்து வருகிறார்.
ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனது பெருமையை அழித்து விட்டதாக அதுல்யா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பாலியல் துன்புறுத்தலால் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவமானமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகில் தான் எங்கள் வீடு. அந்த பகுதியில் வளர்ந்தற்காக நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த சம்பவம் அந்த பெருமையை அழித்துவிட்டது. என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்றார்.