‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கோவையை சேர்ந்தவர் அதுல்யா ரவி. அவரது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய காதல் கண்கட்டுதே படத்தின் மூலம் நடிகை ஆனார். அதன்பிறகு யாமிலி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 படங்களில் நடித்தார். தற்போது முருங்கைக்காய் சிப்ஸ், எண்ணித்துணிக படங்களில் நடித்து வருகிறார்.
ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக கோவை பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தனது பெருமையை அழித்து விட்டதாக அதுல்யா கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‛‛பாலியல் துன்புறுத்தலால் 17 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அவமானமாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட பள்ளியின் அருகில் தான் எங்கள் வீடு. அந்த பகுதியில் வளர்ந்தற்காக நான் எப்போதும் பெருமைப்படுவேன். இந்த சம்பவம் அந்த பெருமையை அழித்துவிட்டது. என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அந்த பெண்ணுக்கு நீதியும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்றார்.