இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா அரசு வெளியிட்ட நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, மலையாள திரை உலகில் கடந்த பல வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் அதிகார மையமாக சேர்ந்து பிறரை வளர விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல பிரச்னைகளை வெளிக்கொண்டு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் பல பிரபல நடிகர்கள், இயக்குனர்களுடன் தாங்கள் சில வருடங்களுக்கு முன்பு எதிர்கொண்ட பாலியல் அத்துமீறல்கள் குறித்து காவல்துறையில் புகார் அளிக்க தொடங்கினர். அந்த வகையில் பிரபல குணச்சித்திர நடிகர்களான முகேஷ், சித்திக் உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அந்த வகையில் நடிகர் முகேஷ் முன்ஜாமின் பெற்றிருந்த நிலையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
ஆனால் நடிகர் சித்திக்கின் ஜாமின் மனு கேரள உயர்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்படும் சூழல் உருவானது. இதனை அறிந்த சித்திக் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தற்போது தலைமறைவாகி உள்ளார். போலீசார் அவர்மீது லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டு, அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னொரு பக்கம் உச்சநீதிமன்ற மூலமாக அவருக்கு ஜாமின் பெறுவதற்கான வேலைகளும் துவங்கியுள்ளன. அதன் முடிவை தொடர்ந்து சித்திக் வெளியே வருவார் என சொல்லப்படுகிறது. அதற்குள் போலீசார் அவரை கைது செய்வார்களா என பொறுத்திருந்து பார்ப்போம்.




