ஆஸ்கர் விருது - நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா | 'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் |

முதன்முதலாக இந்தியாவிலேயே தயாராகியுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ‛ஐஏசி விக்ராந்த்' கொச்சியில் நடைபெற்று வந்த இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை நேற்று பார்வையிட்டார். அவருக்கு கடற்படை அதிகாரிகள் மிக சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோகன்லாலுடன் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியும் பிரபல திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மோகன்லாலை பொறுத்தவரை ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சில ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினன்ட் கலோனல் (துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் தற்போது இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும் பார்வையிட்டுள்ளார் மோகன்லால்.




