போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? | ரஜினி, கமல் படத்தின் ரிலீஸ் தேதியை குறிவைத்த படக்குழு! |

மலையாள திரையுலகில் சிறந்த குணச்சித்திர நடிகையாக வலம் வருபவர் மாலா பார்வதி.. தமிழில் 'இது என்ன மாயம்' மற்றும் 'நிமிர்' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் புகார் பிரிவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்தார் மாலா பார்வதி. இந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நடிகர் சங்க செயலருக்கு ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பி உள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில நாட்களாக தயாரிப்பாளரும், நடிகருமான விஜய்பாபு மீது இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் கூறி போலீஸில் புகார் அளித்தது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய்பாபுவை போலீசார் தேடி வரும் நிலையில் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து அவரை நீக்க வேண்டும் என சினிமா பெண்கள் நல அமைப்பைச் சேர்ந்த நடிகைகளும் மற்றும் சிலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது விஜய்பாபு தானாகவே முன்வந்து நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன், என்றும் தன் மீது உள்ள குற்றச்சாட்டு பொய் என நிரூபித்து விட்டு அதன்பிறகு மீண்டும் சங்கத்தில் இணைந்து கொள்கிறேன் என்றும் தனது ராஜினாமா கடிதத்தை மின்னஞ்சலில் அனுப்பி உள்ளார். ஆனால் அப்படி அவர் அனுப்புவதற்கு முன்னதாகவே நடிகர் சங்கம் தலையிட்டு அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற விரக்தியில் தான் தனது ராஜினாமாவை அனுப்பி வைத்துள்ளார் மாலா பார்வதி.
இதுபற்றி அவர் கூறும்போது, “நடிகர் சங்கத்தில் புகார் பிரிவில் என்னை நியமித்தபோது உறுப்பினராக இருப்பவர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் நம்மால் நியாயமான முறையில் தீர்வு காணமுடியும் என சந்தோஷத்துடன் இதில் பொறுப்பேற்றேன். ஆனால் தற்போது தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பதற்கு இங்கே நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கின்றன என்பதால் இதிலிருந்து நான் வெளியேறுகிறேன்” எனக் கூறியுள்ளார் மாலா பார்வதி.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாலா பார்வதியின் மகன் ஒப்பனைக் கலைஞரை பாலியல் ரீதியாக ஏமாற்றியதாக குற்றச்சாட்டுக்கு ஆளானபோது அதுபற்றி விசாரித்து அது உண்மை என தெரிந்ததும் சம்பந்தப்பட்ட பெண்ணிடமே தன் மகன் மீது போலீசில் புகார் கொடுக்கும்படி கூறியவர் தான் இந்த மாலா பார்வதி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.