'சங்கராந்திகி வஸ்துனம்' ஹிந்தி ரீமேக்கில் மீனாட்சி சவுத்ரி வேடத்தில் ராஷி கண்ணா! | 'பார்டர் 2' படக்குழு வெளியிட்ட 'தி பிரேவ்ஸ் ஆப் த சாயில்' டிரைலர் | மிகவும் உடல் மெலிந்த திரிஷா! வைரலாகும் இன்ஸ்டாகிராம் புகைப்படம்!! | குடும்பங்கள் கொண்டாடிய 'சிறை' முதல் ஆக்சனில் மிரட்டிய 'ரெட்ட தல' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பாடகி எஸ் ஜானகி மகன் முரளி மறைவு | சில நடிகைகளுக்கு நடிக்க தெரியவில்லை : யாரை சொல்கிறார் மாளவிகா மோகனன் | பல மொழி கற்பது : ஆஷிகா ரங்கநாத் பெருமிதம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாக்யராஜால் கலையுலகில் கவிபாட வந்த கவிதை நாயகன் | இன்று தனுஷ் 55வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார்த்தியை கை விட்ட 'வா வாத்தியார்' |

பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். காதல் மன்னனாக அண்டாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), நாடக பாணி படமான தேவதாஸ் (1955), நகைச்சுவை நாயகனாக ஆஜாத் (1955), சரித்திரக் காதலனாக முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக படமான கங்கா ஜமுனா (1961) என திலீப் குமார் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
1970களில் புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து குணச்சித்திர பாத்திரங்களில் ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) உள்ளிட்ட படங்களில் வயது முதிர்ந்த குடும்ப தலைவர், போலீஸ் அதிகாரி என தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார்.