நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். காதல் மன்னனாக அண்டாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), நாடக பாணி படமான தேவதாஸ் (1955), நகைச்சுவை நாயகனாக ஆஜாத் (1955), சரித்திரக் காதலனாக முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக படமான கங்கா ஜமுனா (1961) என திலீப் குமார் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
1970களில் புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து குணச்சித்திர பாத்திரங்களில் ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) உள்ளிட்ட படங்களில் வயது முதிர்ந்த குடும்ப தலைவர், போலீஸ் அதிகாரி என தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார்.