வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. | ஆடை வடிவமைப்பாளரை 2வது திருமணம் செய்த மாதம்பட்டி ரங்கராஜ் | தயாரிப்பாளர் சங்கத்திலும் தலைவர் பதவிக்கு நடிகை போட்டி : பர்தா அணிந்து வந்து மனு தாக்கல் | வார்-2வில் ஹிருத்திக் ரோஷனை விட அதிக சம்பளம் யாருக்குத் தெரியுமா? |
பழம்பெரும் இந்தி நடிகர் திலீப் குமார்(98) இன்று காலை காலமானார். காதல் மன்னனாக அண்டாஸ் (1949), முரட்டு அடியாளாக ஆன் (1952), நாடக பாணி படமான தேவதாஸ் (1955), நகைச்சுவை நாயகனாக ஆஜாத் (1955), சரித்திரக் காதலனாக முகல் ஏ ஆஜாம் (1960) மற்றும் சமூக படமான கங்கா ஜமுனா (1961) என திலீப் குமார் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை எனலாம்.
1970களில் புதிய நடிகர்களின் வரவால் அவருக்கு சினிமாவில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே அவர் 1976ல் திரைத்துறையை விட்டு வெளியேறி ஐந்தாண்டு இடைவெளி எடுத்துக் கொண்டார். 1981ல் அவர் மீண்டும் திரும்பி கிராந்தி எனும் மாபெரும் வெற்றிப்படத்தில் குணசித்திரப்பாத்திரம் ஏற்று நடித்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறவே தொடர்ந்து குணச்சித்திர பாத்திரங்களில் ஷக்தி (1982), கர்மா (1986) மற்றும் சௌடாகார் (1991) உள்ளிட்ட படங்களில் வயது முதிர்ந்த குடும்ப தலைவர், போலீஸ் அதிகாரி என தொடர்ந்து நடித்து வெற்றிகளை குவித்தார்.