'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? |
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் பின்னணியில் உருவான வெப் சீரிஸ் ஸ்டேட் ஆப் ஸீஜ்: 26/11. ஜீ 5 தளத்தில் வெளியானது. தற்போது இரண்டாவது சீசன் ஸ்டேட் ஆப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இது குஜராத்தில் கோவிலில் பக்தர்களை பணயக் கைதிகளா சிறைபிடித்த தீவிரவாதிகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்றிய இந்திய ராணு வீரர்களின் கதை. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5ல் நாளை (ஜூலை 9) வெளிவருகிறது.
இதில் அக்ஷய் கண்ணா ஹீரோவாக நடித்துள்ளார். என் எஸ் ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தை தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி பட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். கென் கோஷ் இயக்கி உள்ளார். ஓய்வுபெற்ற கர்னல் சுந்தீப் சென் இதற்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இருந்தவர்.
இதுகுறித்து இயக்குனர் கென் கோஷ் கூறியிருப்பதாவது: இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம் .என்றார்.