இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.. 27.7 மில்லியன் பேர் டுவிட்டரிலும், 52.5 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும் அவரை பின் தொடர்கின்றனர். இந்தநிலையில் தற்போது தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதுவரை தான் பதிவிட்டு வந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை அனைத்தையும் அதிரடியாக நீக்கியுள்ளார் தீபிகா படுகோனே.
முதலில் தீபிகாவின் சோஷியல் மீடியா கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டனரோ என்றுதான் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஆடியோ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே, தானேதான் அவற்றை அழித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில், “எல்லோருக்கும் வணக்கம்.. என்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள என்னுடைய ஆடியோ டைரிக்கு உங்களை வரவேற்கிறேன். என்னுடைய இந்த செயலை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. 2020ஆம் வருடம் அனைவருக்கும் நிலையில்லாத வருடமாக இருந்தாலும் .என்னை பொறுத்தவரை நன்றி மிகுந்ததாகவும் எனது இருப்பை வெளிப்படுத்த உதவுவதாகவும் அமைந்தது” என கூறியுள்ளார். ஆனாலும் தனது மொத்த பதிவுகளையும் நீக்கியதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.