காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

பாலிவுட் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் குல்சார். அடிப்படையில் உருது கவிஞரான இவர் ஏராளமான ஹிந்தி படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ளார். 1963ம் ஆண்டு 'பண்டினி' என்ற படத்தில் இசை அமைப்பாளர் பர்மன் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு ஆயிரக்கணக்கான பாடல்களை குல்சார் எழுதி உள்ளார். இதுதவிர ஏராளமான புத்தகங்களையும் எழுதி உள்ளார்.
சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை 5 முறை பெற்றுள்ளார். இதுதவிர பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றுள்ளார். இந்திய சினிமாவின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சகேப் பால்கே விருதும் பெற்றுள்ளார். சிறந்த புத்தகங்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு 2023ம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இனி குல்சாருக்கு பத்மவிபூஷன், மற்றும் பாரத ரத்னா விருது மட்டுமே பாக்கி உள்ளது.