யுவன் இசையில் 'கேங்ஸ் ஆப் கோதாவரி' தெலுங்குப் படம் | இரண்டு தயாரிப்பாளர்களால் கமல்ஹாசனுக்கு நெருக்கடி | நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் |
பிரபல பாலிவுட் கலை இயக்குனரான நிதின் சந்திரகாந்த் தேசாய்(58) தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார் நிதின் சந்திரகாந்த் தேசாய். ‛‛1942 ஏ லவ் ஸ்டோரி, தேவதாஸ், முன்னாபாய், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை, லகான்'' உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்கம் செய்துள்ளார். 100 படங்கள் வரை கலை இயக்கம் செய்துள்ள இவர் மும்பையை அடுத்து கர்ஜாத் என்ற இடத்திற்கு அருகே 52 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக என்டி ஸ்டுடியோஸ் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். இங்கு தான் ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்கள் உருவாகின.
கலை இயக்குனராக மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் அவர் செய்துள்ளார். கலை இயக்கத்திற்காக 4 முறை தேசிய விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று(ஆக., 2) அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நிதின் சந்திரகாந்த் தேசாய். தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.