இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு | "நான்தான் பர்ஸ்ட்" என்ற ராஷ்மிகாவின் கருத்துக்கு எதிர்ப்பு | எனக்கு வராத சம்பளத்தை கொண்டு இரண்டு படங்கள் தயாரிக்கலாம்: கலையரசன் வருத்தம் | கதை நாயகியாக நடிக்கும் மிஷா கோஷல் |
பிரபல பாலிவுட் கலை இயக்குனரான நிதின் சந்திரகாந்த் தேசாய்(58) தனது ஸ்டுடியோவில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாலிவுட் திரையுலகினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கலை இயக்குனராக பணியாற்றி வருகிறார் நிதின் சந்திரகாந்த் தேசாய். ‛‛1942 ஏ லவ் ஸ்டோரி, தேவதாஸ், முன்னாபாய், ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை, லகான்'' உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்கம் செய்துள்ளார். 100 படங்கள் வரை கலை இயக்கம் செய்துள்ள இவர் மும்பையை அடுத்து கர்ஜாத் என்ற இடத்திற்கு அருகே 52 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக என்டி ஸ்டுடியோஸ் ஒன்றையும் நிர்வகித்து வந்தார். இங்கு தான் ஜோதா அக்பர் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்கள் உருவாகின.
கலை இயக்குனராக மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு போன்ற பணிகளையும் அவர் செய்துள்ளார். கலை இயக்கத்திற்காக 4 முறை தேசிய விருது, பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று(ஆக., 2) அவரது ஸ்டுடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் நிதின் சந்திரகாந்த் தேசாய். தற்கொலைக்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. இருப்பினும் நிதி நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்து இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மும்பை போலீசார் விசாரித்து வருகின்றனர்.