நான் பணம் கேட்டேனா... ஏமாந்துராதீங்க... : எச்சரிக்கும் சிங்கம் புலி | 19ம் நூற்றாண்டு கதையில் நடிக்கும் விஜய் தேவரகொண்டா | சம்பளத்தை உயர்த்திய அனுபமா பரமேஸ்வரன் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு துவங்கியது | திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' |
பாலிவுட்டின் பிரபல முன்னணி நடிகரான சல்மான்கானின் சகோதரிகளில் ஒருவர் அர்பிதா கான். சமீபத்தில் இவரது வீட்டில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரத்தோடுகள் காணாமல் போய்விட்டதாக போலீசில் புகார் அளித்தார். தனது வீட்டிற்கு அவ்வப்போது உதவி செய்து வந்த பணியாளர் சந்தீப் ஹெக்டே என்பவர் மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சந்தீப் ஹெக்டே அந்த வைரத்தோடுகளை திருடியது உறுதியானது. அதுமட்டுமல்ல அவர் நகைகளை திருடியவுடன் எந்த ஒரு முன்னறிவிப்பும் சொல்லாமல் வேலைக்கு வராமல் ஓடிவிட்டதும் போலீசின் சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது சந்தீப் ஹெக்டே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்து நகைகள் மீட்கப்பட்டு சல்மான்கானின் சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக கடந்த மாதம் இதேபோல பிரபல ஹிந்தி பாடகர் சோனு நிகமின் தந்தை வீட்டிலும் அங்கே பணிபுரிந்த கார் டிரைவர் இதேபோன்று பணத்தை கொள்ளை அடித்து சென்றதும், இங்கே தமிழகத்தில் நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவின் வீட்டிலும் அங்கே பணிபுரிந்த பெண் இதேபோன்று நகைகளை திருடியதும் பரபரப்பை ஏற்படுத்தி அடங்கிய நிலையில், தற்போது சல்மான்கான் சகோதரி வீட்டில் நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.