இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
பாலிவுட் சினிமாவின் முன்னணி வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நவாசுதீன் சித்திக். தமிழில் பேட்ட உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். நவாசுதீன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இப்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் நடித்த குளிர்பான விளம்பரம் ஒன்று சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது இந்த விளம்பரத்தில் பெங்காலி மக்களை சோம்பேறிகள் என்று சித்தரிக்கும் வகையில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இது பெங்காலி மக்களை அவமானப்படுத்தும் செயல் என்று திவ்யான் முகர்ஜி என்பவர் கோல்கட்டா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குளிர்பான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெங்காலி சமூக மக்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் திட்டமிட்டு எந்த கருத்தையும் இடம்பெற செய்யவில்லை. இது ஒரு பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளது.