'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
ஹிந்தித் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட். அவர் 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாகத்தான் நடித்தார் என்றாலும் படத்தில் அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமே இல்லாமல் இருந்தது. மேலும், ஒரு துணை நடிகைக்குரிய கதாபாத்திரத்தையே உருவாக்கி இருந்தார் ராஜமவுலி. இதனால், மிகவும் வருத்தத்தில் இருந்த ஆலியா பட், 'ஆர்ஆர்ஆர்' படம் சம்பந்தப்பட்ட சில படங்களை தனது இன்ஸ்டாவிலிருந்து நீக்கினார். பின்னர் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் அடுத்து நடிக்க உள்ள ஒரு புதிய படத்திற்கு ஆலியா பட் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால், அப்படத்திலிருந்து ஆலியா விலகிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். அது மட்டுமல்ல இனி தெலுங்குப் படங்களில் நடிக்கும் எண்ணமே இல்லை என ஆலியா சொல்லிவிட்டாராம். அவர் முதன்மைக் கதாநாயகியாக நடித்து வெளிவந்த ஹிந்திப் படமான 'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்தது. எனவே, இனி ஹிந்தியில் மட்டுமே நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் ஆலியா.