ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
1983ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாக வைத்து 83 என்ற படம் தயாராகி இன்று (டிச 24) வெளியாகி உள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் மொழிகளில் வெளியாகி உள்ளது.
இதில் கேப்டன் கபில்தேவ்வாக ரன்வீர் சிங் நடித்துள்ளார், ஸ்ரீகாந்தாக ஜீவா நடித்துள்ளார். கபில்தேவ் மனைவியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இந்த படத்தில் உலக கோப்பை கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் காட்டப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு உரிமத் தொகையாக படத் தயாரிப்பு தரப்பில் இருந்து 15 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் எதிர்பார்க்காவிட்டாலும், படத் தயாரிப்பு இந்த பரிசை அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது. இதில் கேப்டன் கபில்தேவுக்கு மட்டும் 5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா 83ல் உலக கோப்பையை வென்றபோது வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்கிய சம்பளம் 2100 ரூபாய் தான். மொத்த அணிக்கும் சேர்த்து 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் 83 படத்தின் மூலம் அவர்களுக்கு 15 கோடி கிடைத்துள்ளது. ஒரு வெற்றி காலம் கடந்தும் அதற்கான பலனை கொடுத்துக் கொண்டிருக்கும் என்று படத்தில் ஒரு வசனம் வரும். அது இப்போது உண்மையாகி உள்ளது.