புதுமுகம் ரீஜன் ,ஆர்ஷிதா ஜோடியுடன் பட்டிமன்றம் ராஜா , வளவன் , மகாநதி சங்கர் , ரேகா சுரேஷ் , பிதாமகன் விச்சு , தாட்சாயினி , போராளி திலீபன் , மோனா , கலை, சக்திவேல் , சிவராஜ் , நிப்பு உள்ளிட்டோர் நடிக்க நாகராஜனின் இயக்கத்தில் ரலப்.புரடக்ஷன்ஸ் பேனரில் ரபேல் சல்தானா தயாரிக்க கிரிஸ்டல் ஸ்டுடியோவாங்கி வெளியிட்டிருக்கும் படம் தான் "அழகென்ற சொல்லுக்கு அமுதா. "
கதைப்படி சுமார் மூஞ்சிகுமாரான...ஒ ,சாரி முருகனான நாயகர் ., ஒரு பிரபல நடிகரின் நற்பணி மன்றத் தலைவர் .... என்பது தவிர பெரிதாக வேலை வெட்டி இல்லாதவர் ... தன்னை , காதலிக்க மறுக்கும் கதாநாயகியை வழிக்கு கொண்டு வர படாத பாடு படுகிறார். கதாநாயகியும் போலீஸ் , டான் , நாயகரின் தந்தை ...என ஏகப்பட்ட இடங்களில் புகார் செய்து , இவர் மீது காதல் இல்லை ... என சொல்லி , நாயகரை விரட்டியடிக்கப்படாத ப்பாடுபடுகிறார். இறுதியில் நாயகரின் தூய காதல் ஜெயித்ததா ? நாயகியின் கோப விரட்டல் ஜெயித்ததா ...? என்பது தான் "அழகென்ற சொல்லுக்கு அமுதா " படத்தின் கதையும் , களமும்.கதாநாயகரான ரீஜன்., கதைக்கேற்ற சுமார் மூஞ்சி முருகனாக தெரிந்தாலும் தனது வித்தியாசமான நடை , உடை பாவனைகள் மற்றும் நக்கல் , நையாண்டிகளால் கவனம் ஈர்க்கிறார். "தண்ணிக்குள்ள பந்த தூக்கிப் போட்டுட்டா .. அது தண்ணிக்குள்ளேயே இருக்காது ...லவ்ங்கறதும் .அப்படித்தான் ஒரு நாள், அவ உள்ளேயிருந்தும்அது வா... வெளியே வரும் ... " என்றும் , " என் மனசை எங்கே தொலைச் சேனோ அங்க தான் தேட முடியும் ... திருச்சி பஸ்ல ஏறிட்டு திண்டுக்கல்ல இறங்க முடியாது ... என் கிட்டே என்ன குறைன்னு சொல்லு நான் என்ன மாத்திக்கிறேன் ...." என காதலியிடம் கெஞ்சும் , மிஞ்சும் வட சென்னை வாலிபனாக நாயகர் ரீஜன் ., ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு சீனிலும் ரசிகனின் மனம் கவருகிறார் .
எஸ் டி டீபோன் பூத்தில் வேலை பார்க்கும் அமுதாவாக , கதாநாயகியாக... ஆர்ஷிதா., சற்றே சோகம் அப்பிய முகச்சாயலுடன் இயல்பான அழகில் சவாலான பாத்திரத்தில் சபாஷ் சொல்லும்படி நடித்திருக்கிறார். "உன் நினைப்பு ,குவாட்டர் அடிச்சாலும் போகமாட்டேங்குது ...ஆப் அடிச்சாலும் போகமாட்டேங்குது ..என்ன அடிச்சா போகும்... " என கேட்கும் நாயகரிடம்,"ரோட்ல போய் நில்லு லாரி அடிச்சா போகும்...." எனும் அம்மணியின் வெடுக் -துடுக்...பேச்சு மிரட்டல்.
"எட்டு மணிக்கு மேல ஒரு ஆம்பள வீட்டுல இருந்தா., அந்த வீடு உருப்புடாதுடா ..." என்பதில் தொடங்கி ,"லவ் பெயிலியர்ன்னா., சாப்பிடாம அதே எண்ணத்தோட இருப்பங் கண்ணு கேள்வி பட்டிருக்கேன் .இங்கு 40 இட்லி திங்குறே....என்பது வரை., வேலை வெட்டி இல்லா நாயகரை கரிச்சுக் கொட்டும் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா படம் பார்க்கும் ஒவ்வொருவரின் அப்பாவையும் ஞாபகப்படுத்துகிறார்.போலீஸ் இன்ஸாக மகாநதி சங்கர் , "அவன் ஹைட் சொன்ன வெயிட் சொன்ன... பைட் பத்தி மட்டும் கொல்லலையேம்மா... "என ஹீரோவிடம் அடி வாங்கி புலம்பும் டானாக வளவன், மற்றும் பிற பாத்திரங்களில் ரேகாசுரேஷ் ,பிதாமகன் விச்சு, தாட்சாயினி, போராளி திலீபன், மோனா, கலை, சக்திவேல், சிவராஜ் , நிப்பு உள்ளிட்டோர் கச்சிதமாக நடித்திருக்கின்றனர். அதிலும் ,கலை உள்ளிட்டநாயகரின் நான்கு நண்பர்களும் கிடைத்த இடத்தில் எல்லாம் நச்-டச் நடிப்புக் கொடுத்து சிரிப்புக்கு பஞ்சம் இல்லாது பார்த்துக் கொள்வது படத்திற்கு பெரும் பலம்.
ஒரே சண்டைக் காட்சி என்றாலும் ஒம் பிரகாஷின் சண்டை பயிற்சி , ஒய்யாரம். ஜெ கே வின்கலை இயக்கம் வியாசர்பாடி ஏரியாவை பக்காவாக படம் பிடிக்க உதவியிருக்கிறது .கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , பக்கா தொகுப்பு .ஜெ.கே . கல்யாண்ராமின்ஒளிப்பதிவில் வியாசர்பாடியும் சென்னையும் புதிதாய் தெரிகிறது.ரஜின் மகாதேவ் இசையில் " நான்காயலான் கடை ஓட்ட.." ,"வியாசர்பாடி அண்ணன் கேடி ..","உசுற அடிச்சு நொறுக்கி ...." "என் தேவதையோட கொலுசு சத்தம்..." உள்ளிட்ட பாடல்களும், பின்னணி இசையும் சுபராகம்.
நாகராஜனின் எழுத்து ,இயக்கத்தில்.,"நல்ல கவிதை சென்னா நம்பாதீங்க .. எவனாவது நாறக் கவிதை சொல்வான் நம்புங்க...." எனநாயகியை பார்த்து நாயகர் சமூக நடப்பை சொல்லும் இடத்தில் தொடங்கி., கதாநாயகி மீதான காதலை கைவிடும்படி சொல்லும் காவல் துறை அதிகாரியிடம், "நீங்க குற்றவாளிங்களை பிடித்து வந்து உண்மையை கொண்டு வர அவங்களை என்ன செய்வீங்க ? டார்ச்சர் பண்ணுவீங்கள்ள ... அது மாதிரி , அமுதாகுள்ளே இருக்கிற என் மீதான ,லவ்வக் கொண்டு வர., நான் அவரை சுற்றி வந்து டார்ச்சர் தருகிறேன் ...." என்று நாயகர் லாஜிக்காக பேசுவது வரை., இப்பட இயக்குனர் ? யார் ..? என புருவம் உயர்த்த வைத்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்டுதலுக்குரியது. அதே போன்று .,யார் மனமும் பெரிதாக புண்படாதபடி தன் அபிமான நடிகர் படங்களில் பேசிய வசனங்களையே வாழ்க்கையாக கருதும் ஒரு சில ரசிகனின் அறியாமையையும் , இன்னும் சிலரின் தெளிவான பார்வை இல்லா சினிமா மோகத்தையும் ஆங்காங்கே நாசுக்காக சுட்டிக்காட்டியிருக்கும் விதமும் போற்றுதலுக்குரியது.
ஆக மொத்தத்தில் ,கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளி வந்த "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா " படகதையமைப்பில் வேறுபாணியில் சில பல லாஜிக் உரைகளுடன் வந்திருக்கும் "அழகென்ற சொல்லுக்கு அமுதா தமிழ் சினிமாவில் புது வித அமுதே!"