உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு மலையாள சினிமா மொத்தமாக முடங்கி விட்டது. அதனால் ஓடிடி தளங்கள் அங்கு வேமாக வளர்ந்து வருகிறது. மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 ஓடிடி தளத்தில் வெளியானது 3 படங்களுமே தயாரிப்பாளருக்கும், ஓடிடி தளத்திற்கும் லாபத்தை கொடுத்தது. நயன்தாரா நடித்த நிழல் படம் ஓடிடியில் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை.
கொரோனா தொற்றுக்கு பிறகு முதன் முதலில் வெளியானது பகத் பாசில் நடித்த சி யூ சூன் என்ற திகில் படம். ஊரங்கு காலத்தில் செல்போனில் படம்பிடிக்கப்பட்ட இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது. அதன்பிறகு மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ஜோஜி படம் வெளியானது. அதுவும் வெற்றி பெற்றது.
தற்போது பகத் பாசிலின் 3வது படமாக மாலிக் வெளியாக இருக்கிறது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில், உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த மாதம் 13ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது படத்தை ஓடிடியில் வெளியிடப்போவதாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தியேட்டர் அதிபர்கள் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப் கடிதம் எழுதியுள்ளார். ஆண்டோ ஜோசப்பின் முடிவை எதிர்க்கப் போவதில்லை என்று கேரள திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் பகத் பாசில் ஓடிடி வெளியீட்டில் ஹாட்ரிக் அடிக்கிறார்.