Advertisement

சிறப்புச்செய்திகள்

அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் | ராதிகாவுக்கு காலில் என்னாச்சு : நேரில் நலம் விசாரித்த சிவகுமார் | அல்லு அர்ஜுன் - சிரஞ்சீவி குடும்பத்தினர் மோதல் ? | நில சர்ச்சை விவகாரம் : ஜூனியர் என்.டி.ஆர் விளக்கம் | மே 31ல் ரிலீஸாகும் ‛மல்ஹர்' திரைப்படம் | என் கதாபாத்திரங்களை அவர் ஸ்டைலில் அசத்தியிருக்கிறார் : பஹத் பாசிலுக்கு மம்முட்டி பாராட்டு | இயக்குனர்களுக்கு இணையான சம்பளம் ; டர்போ கதாசிரியர் வேண்டுகோள் | 'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள்

06 மே, 2024 - 06:16 IST
எழுத்தின் அளவு:
The-makers-of-Manjummel-Boys-who-got-pre-bail

மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மேல் பாய்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. கேரளாவை போல தமிழகத்திலும் இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. மலையாளத்திலேயே முதன்முறையாக 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையும் பெற்றது. ஆனால் இந்த படத்தின் தயாரிப்பு செலவுக்காக தான் 7 கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருந்ததாகவும் படம் வெளியான பிறகு லாபத்தில் 40 சதவீதம் தனக்கு தருவதாக படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சவ்பின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இருவரும் ஒப்பந்தம் செய்திருந்தனர், ஆனால் படம் வெளியான பிறகு லாபத் தொகையை தர மறுக்கின்றனர் என்றும் கூறி சிராஜ் வலியதாரா ஹமீது என்பவர் இவர்கள் மீது வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் நீதிமன்றம் மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் வங்கிக்கணக்கை முடக்கியதுடன் இதுகுறித்து விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு வரும் மே 22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் மே 22 வரை தாங்கள் கைது செய்யப்படாமல் இருப்பதற்காக முன் ஜாமீன் வழங்குமாறு கோரி சவ்பின் சாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி இருவரும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். அவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் இவர்களுக்கு முன் ஜாமீன் வழங்கியுள்ளது.

இவர்கள் அளித்த மனுவில், தாங்கள் லாபத்தொகை தராமல் ஏமாற்றவில்லை என்றும் வழக்கு தொடர்ந்துள்ள சிராஜ் என்பவர் ஆன்லைன் மீடியாக்களில் வெளியாகும் 250 கோடி வசூல் என்பது போன்ற தொகைகளை மனதில் வைத்துக் கொண்டு லாபத்தை கேட்கிறார் என்றும் கூறியிருந்தனர். ஆனால் முறைப்படி இந்த படம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை சரியாக கணக்கிட்டு அதன் பிறகு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி அவருக்கு லாபத்தொகை பகிர்ந்து அளிக்க இருக்கிறோம் என்றும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள்என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க ... மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு மோகன்லால் இயக்கும் 'பரோஸ்' பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in