மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி | தற்கொலைக்கு முன் சந்திராகந்த் வெளியிட்ட வீடியோ | மோகன்லால் மேல் எனக்கு மரியாதையே கிடையாது : சாந்தி வில்லியம்ஸ் | 'உத்தம வில்லன்' விவகாரம் : தயாரிப்பாளர் தேனப்பன் விளக்கம் | தாய்க்குத் தலைமகன், வசீகரா, ஜெயிலர் : ஞாயிறு திரைப்படங்கள் | அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கும் சோஷியல் மீடியா பிரபலம் |
மறைந்த நடிகர் குமரிமுத்து முன்பு அளித்த ஒரு பேட்டியை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, ‛சில கற்றார் பேச்சும் இனிமையே...' என பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அந்த பேட்டியில், நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்துள்ளார் குமரிமுத்து.
அதில், இந்தப் பாடலில் யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். நீங்கள் படித்தவர்கள் தான் இல்லை என்று சொல்லவில்லை. சில நூல்களை மட்டுமே கற்றவர் பேச்சிலும் பல கற்றோம் என பெருமை கொள்ளும் மனிதர்கள் பெரிய படிப்பு படித்தோருக்கு அச்சாணியாக கொஞ்சம் படித்தவர்கள் இருப்பார்கள். குறிப்பாக, பெரிய சூரியனின் ஒளியில் இருந்து ஒரு சிறு குடை காப்பது போல் என்று அந்த பாடலின் விளக்கத்தை கொடுத்திருக்கிறார்.
ஆனால் ஏ.ஆர்.ரஹ்மான் எதற்காக இப்போது இந்த பதிவை போட்டு உள்ளார். இதன் மூலம் யாருக்காவது அவர் பதில் கொடுத்து இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில இளையராஜா, வைரமுத்து ஆகியோரை குறிப்பிட்டுள்ளதாக கருத்து பதிவிட்டுள்ளனர்.