உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படம் வெளியானது. சமீப காலமாகவே சீரியசான படங்களில் தொடர்ந்து நடித்து வந்த பஹத் பாஸில் இந்த படத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடுவின் மகன் அகில் சத்யன் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அஞ்சனா ஜெயபிரகாஷ் இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளார்.
அதேசமயம் கடந்த 2015ல் வெளியான பிரேமம் படத்திலேயே இவருக்கு நடிக்க அழைப்பு வந்தது. மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த செலினா கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷனில் கலந்து கொண்டு தேர்வான அஞ்சனா ஜெயபிரகாஷ் இரண்டு நாட்கள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் அதன்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை அந்த கதாபாத்திரத்தில் இருந்து இவர் விலக்கப்பட்டு, அவருக்கு பதிலாகத்தான் மடோனா செபாஸ்டியன் நடித்தார்.
அந்த படத்தின் மூலம் மடோனாவுக்கு கிடைத்த புகழ் நாடறிந்த ஒன்று. சினிமாவில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை அப்போதுதான் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ள அஞ்சனா ஜெயப்பிரகாஷ், இத்தனை வருடங்கள் கழித்து தற்போது பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக தமிழில் துருவங்கள் பதினாறு, அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு உள்ளிட்ட சில படங்களிளும் நடித்துள்ளார் அஞ்சனா ஜெயபிரகாஷ்