உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் |
கொரோனா முதல் அலையின்போதே திரையுலகை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும் அதிக அளவிலான நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்களை வழங்கியவர் பாலிவுட் நடிகர் அக்சய் குமார். அந்தவகையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், ஏற்கனவே நிவாரண நிதி அளித்துள்ள அக்சய் குமார், தற்போது 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான உணவுப்பொருள்களை வழங்கியுள்ளார்.
இந்த தகவலை நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா என்பவர் வெளியிட்டுள்ளார்.. நடக்குழுவினருக்கு உதவி செய்யும்படி அக்சய் குமாரிடம் தான் கோரிக்கை வைத்ததாகவும் அதை தொடர்ந்து 3600 டான்சர்களுக்கு ஒருமாதத்திற்கு தேவையான நிவாரண பொருட்களுக்கான தொகையை தனது கணேஷ் ஆச்சார்யா அறக்கட்டளையிடம் அக்சய் குமார் கொடுத்து விட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் நடன குழுவில் இருப்பவர்களுக்கு இந்த தொகை பணமாகவோ அல்லது நிவாரண பொருட்களாகவோ அவர்களது தேவைக்கேற்ப வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். கணேஷ் ஆச்சார்யா.