ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் | ராஜமவுலி - மகேஷ்பாபு பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு | வளரும் நடிகர் பட்டியலில் இணைந்த கவின் | மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ஜோடி சேரும் ராபர்ட் மாஸ்டர் - வனிதா விஜயகுமார் | ஆரம்பமே ஹீரோயின் : அசத்தும் தேஜூ அஸ்வினி | மோடி பயோபிக் படத்தில் நடிப்பது உண்மையா? - சத்யராஜ் தந்த விளக்கம் | இந்தியன் - 2, இந்தியன்- 3 படம் குறித்த புதிய அப்டேட் வெளியிட்ட கமல் - ஷங்கர் | கூத்தாடி ஆகிட்டேன்னு திட்டுவார் : அப்பா குறித்து மதுரை முத்து உருக்கம் | முதியோர் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாடிய கேப்ரில்லா செல்லஸ் | நெகட்டிவ் கமெண்ட்ஸ்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
அஜய் தேவ்கன் நடித்து வரும் படம் மைதான். அமித் சர்மா இயக்கும் இந்தப் படத்தை தற்போது அஜித் படத்தை தயாரித்து வரும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படம் படம் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டது. இதன் படப்பிடிப்புக்காக மும்பையில் பிரமாண்ட கால்பந்து மைதான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. மாதக் கணக்கல் அந்த செட் பயன்படுத்தப்படாததால் வீணானது.
கொரோனா தொற்றின் முதல் அலை முடிந்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. சில நாட்களே படப்பிடிப்பு நடந்த நிலையில் 2வது அலை காரணமாக படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டது. அதோடு சமீபத்தில் வீசிய டப் தேவ புயலால் அந்த செட் தரைமட்டமாகி விட்டது. இனி படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டுமானால் புதிய செட் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது: எனக்கு நடந்து கொண்டிருக்கிறது, மிகவும் கொடூரம். அதை நினைத்துப் பார்க்ககூட விரும்பவில்லை. மைதான் ஷெட்டை நினைத்துப் பார்க்கும் மனநிலையில்கூட நான் இல்லை. நஷ்டம் குறித்து நினைத்துப் பார்த்தால் நான் அழத் துவங்கிவிடுவேன். பட்ஜெட் அதிகமாவது, செலவுகள் கூடுவதை நினைத்தால் எனக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. உயிர்சேதம் எதுவும் இல்லை என்பதே மன ஆறுதல் தருகிறது. என்று கூறியிருக்கிறார்.