Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடக்கு, தெற்கு பிரிவினை வேண்டாம்: அக்ஷய்குமார், கமல் வேண்டுகோள்

23 மே, 2022 - 13:28 IST
எழுத்தின் அளவு:
Do-not-divide-North-and-South-says-Kamal,-Akshaykumar

வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்கிற கோஷம் பல ஆண்டுகளாகவே தெற்கில் இருந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் வளர்ந்த மாநிலங்களாக தென்னிந்திய மாநிலங்களை முதலிடத்தில் இருக்கிறது. அரசியலை போலவே சமீபகாலமாக திரைப்படங்களிலும் வடக்கு, தெற்கு பிரித்து பார்க்கப்படுகிறது. இதனை அக்ஷய்குமார் கடுமையாக எதிர்த்துள்ளார்.

அவர் நடித்துள்ள பிருத்விராஜ் படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர் இதுகுறித்து பேசியிருப்பதாவது: ஒவ்வொரு படமும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையிலேயே உருவாகிறது. அனைத்து படங்களும் வெற்றிபெற வேண்டும். தென்னிந்திய சினிமா, வட இந்திய சினிமா என்று யாராவது பிரித்து சொன்னால், அதை வெறுக்கிறேன். அதோடு பான் இந்தியா படங்கள் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. நாம் அனைவரும் ஒரே துறையில் தான் பணியாற்றுகிறோம் என்றே நம்புகிறேன். தெற்கு, வடக்கு என்கிற விவாதம் பெரிதாக மாறிவிட்டது. அது நிறுத்தப்பட வேண்டும். மொழியை பொறுத்தவரை அவரவர் தாய்மொழியில் தான் பேசி வருகிறோம். அது அழகாக இருக்கிறது. இதில் பிரச்சினை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படி பிரித்துப் பார்ப்பது துரதிர்ஷ்டமானது. என்றார்.

இதே கருத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்று வரும் கமல்ஹாசன் அங்குள்ள மீடியாக்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நான் எப்போதும் என்னை இந்தியனாகவே பார்க்கிறேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நான் வசதியாக இருக்க முடியும். அதுதான் இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டின் அழகு. வடக்கிலும் தெற்கிலும் இருக்கும் அபாரத் திறமைகளை அறிவேன். அதனால் அதைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
பிரதமர் மோடி அரசியல்வாதியல்ல, தலைவர் : கிச்சா சுதீப் புகழாரம்பிரதமர் மோடி அரசியல்வாதியல்ல, ... அடுத்தடுத்து திருமண புகைப்படங்களை வெளியிட்டு மகிழும் நிக்கி கல்ராணி அடுத்தடுத்து திருமண புகைப்படங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

S Bala - London,யுனைடெட் கிங்டம்
24 மே, 2022 - 14:47 Report Abuse
S Bala இவனுங்க யாரும் நாட்டு நலனை மனதில் வைத்து இதை சொல்லவில்லை அவனவன் படம் எல்லா ஊரிலும் ஓடி இவனுங்களுக்கு சம்பாதித்து கொடுக்க வேண்டும் என்ற ஆசை. இந்த அக்ஷய்குமார் ஏன் தமிழ்நாட்டில் ஓடும் ரயில்களுக்கு இந்தி பெயர் வைப்பது, அனைத்து மக்களும் பணம் கொடுத்து ஆரம்பிக்கப்படும் மத்திய திட்டங்களுக்கு எல்லாம் ஜன ஜூன் யோஜனா என்றெல்லாம் பேர் வைக்கும்போது எதிர்க்கவில்லை ?
Rate this:
ramtest - Bangalore,இந்தியா
24 மே, 2022 - 13:04 Report Abuse
ramtest அப்போ தேவையில்லாமல் ஹிந்திக்கு யாரும் buildup கொடுக்க வேண்டாம் ...
Rate this:
Ravi Chandran - Vienna,ஆஸ்திரியா
24 மே, 2022 - 00:40 Report Abuse
Ravi Chandran வடக்கு தெற்கு என பேச வைப்பதே இந்தியை தூக்கி பிடிக்கும் வடக்கு அரசியல் வியாதிகள்தான்
Rate this:
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
24 மே, 2022 - 20:39Report Abuse
கல்யாணராமன் சு.இங்கே நாம என்ன பண்ணிக்கிட்டுருக்கோம் ? தமிழை மட்டுந்தான் மொழி மத்ததெல்லாம் குப்பைன்னுதானே பேசறோம் ? அது பரவாயில்லையா ? எல்லாருக்கும் அவங்க அவங்க மொழி ஒஸ்திதான் ... "நான் தமிழன்டா நான்தான் பிஸ்தா என்னடா மொழிதான் supreme ... நீ சுண்டைக்கா ... உன் மொழி தண்டம்" appa...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
24 மே, 2022 - 00:09 Report Abuse
Aarkay இங்கு ஒரு இசை மாமேதை இந்திப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனதும் தமிழ்தான் இணைப்பு மொழி என்று சொன்னாரே அவர் இந்திப்படங்களில் வேலை செய்தபோது, தமிழ்தான் பேசினாரா? நம்மை உசுப்பி விட்டு குளிர்காயும் போலி தமிழ் காப்பாளர்கள். கூத்தாடிகளை சொல்லித்தான் தேசப்பற்றை நாங்கள் உணர வேண்டிய அவசியமில்லை. இவர்களை விட எங்களுக்கு அது நிறையவே இருக்கிறது.
Rate this:
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
23 மே, 2022 - 16:17 Report Abuse
Easwar Kamal இந்த பிரிவினை வாதம் முதலில் ஆரம்பித்து வைத்து ஆந்திர/கர்நாடகம் திரை உலகம்தான். ரெண்டு படம் ஓடுன உடனே இவனுங்கதான் இந்திய திரை துறை தூக்கி நிறுத்திய மாதிரி பில்ட் அப் பண்ணனுணவ. அதுக்கு அப்புறம் வந்த படங்கள் எல்லாம் ஓத்திகிச்சு இப்ப்போ வாய் அடிச்சு இருக்கானுவ. இது எல்லாம் கண்டுக்க வேணாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in