மொய் என்பது தமிழர்களின் வாழ்வில் பின்னிப் பிணைந்த ஒன்றாக இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்து விழா என்றே, தனியே நடத்தி வருகின்றனர். இந்த விழா குறிப்பாக ஆடிமாதம்தான் அதிகளவில் நடத்தப்பட்டு வருகிறது. இதனை மையப்படுத்தி சோழ நாடு என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது. தேவா, அஸ்கிதா என்ற புதுமுகங்கள் நடித்து வருகின்றனர். ரவிச்சந்திரன் என்பவர் இயக்க, மோகன்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீசுவரர் இசையமைக்கிறார். எய்ம் எண்டெர்டெயின்மென்ட் சார்பில் சசிகலா தயாரிக்கிறார். பட்டுக்கோட்டை, கந்தர்வகோட்டை, பேராவூரணி, ஆவணம், பிள்ளையார் திடல் உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.