அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா |

பொதுவாகவே இசை அமைப்பாளர் தேவா இசை அமைப்பாளராக அறிமுகமானது 'வைகாசி பொறந்தாச்சு' படம் தான் என்பார்கள். ஆனால் அதற்கு முன்பே அவர் 'மாட்டுக்கார மன்னாரு' என்ற படத்திலேயே அறிமுகமாகி விட்டார். அதற்கு பிறகு மனசுக்கேத்த மகராசா படத்திற்கு இசை அமைத்தார். மூன்றாவதாகத்தான் 'வைகாசி பொறந்தாச்சு' படத்திற்கு இசை அமைத்தார். பிரசாந்த் அறிமுகமான இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானதால் தேவா பிரபலமானார். குறிப்பாக "சின்னப்பொண்ணுதான் வெக்கப்படுது அம்மா அம்மாடி", "தண்ணிகொடம் எடுத்து..." போன்றவை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்தன.
'மாட்டுக்கார மன்னாரு' படத்தில் சந்திரசேகர் கதை நாயகனாக நடித்திருந்தார். அருந்ததி, அஸ்வினி நாயகிகளாக நடித்திருந்தனர். குமரிமுத்து, செந்தில், பண்டரிபாய், காந்திமதி நடித்திருந்தார்கள். இந்த படத்தில் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இவரது பெயரை சி தேவா என குறிப்பிட்டனர்.
'மனசுக்கேத்த மகராசா' படத்தில் ராமராஜன், நாயகனாகவும், சீதா நாயகியாகவும் நடித்திருந்தனர். தீனதயாளன் என்பவர் இயக்கி இருந்தார். இதிலும் 6 பாடல்களுக்கு இசை அமைத்திருந்தார் தேவா. இந்த இரு படத்தின் பாடல்களும், வைகாசி பொறந்தாச்சு படத்திற்கு பிறகு கவனிக்கப்பட்டு ரசிக்கப்பட்டது.
முன்னிணி இசை அமைப்பாளரான அனைவரும் முதல் படத்தில் ஹிட் கொடுத்தவர்கள். ஆனால் தேவா 2 படத்தில் தோல்வி அடைந்து 3வது படத்தில் வெற்றி பெற்றவர். தேவாவிற்கும் முதல் படம் வெற்றிப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முதல் இரண்டு படம் பற்றி பெரிதாக பேசிக் கொள்வதில்லை.