ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
சினிமா போன்று சின்னத்திரைக்கும் பல சங்கங்கள் உள்ளன. இதன் கூட்டமைப்பாக பெப்சி சங்கத்தை போன்று தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு இருக்கிறது. இதன் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது.
சங்க வளாகத்தில் நடந்த எளிய விழாவிற்கு கூட்டமைப்பின் தலைவர் தளபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.ரவிவர்மா முன்னிலை வகித்தார். இவர்கள் உள்பட துணை தலைவர் சி.ரங்கநாதன், பொருளாளார் வி.ராஜா ஆகியோர் பதவி ஏற்றுக் கொண்டனர்.
விழாவில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழக இயக்குனர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.