‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
சர்வதேச புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்திய தொலைக்காட்சிக்கு வருவது புதிதல்ல. கோன் பனைகா குரோர்பதி, பிக் பாஸ், சேலன்ஞ், சூப்பர் டேலண்ட் என பல நிகழ்ச்சிகள் வெளிநாட்டில் இருந்து இங்கு இறக்குமதி ஆகியுள்ளது. சமீபத்திய வரவாக மாஸ்டர் செப் நிகழ்ச்சி வந்துள்ளது.
இந்த வரிசையில் அடுத்து வருகிறது சர்வைவர். இருக்கிற நிகழ்ச்சிகளிலேயே இதுதான் ஆபத்தானது. இந்த நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் முன்பே கசிந்திருந்தாலும், இப்போதுதான் சேனல் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தி அறிவித்திருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்: பிக் பாஸ் வீட்டுக்குள் நடக்கிற மாதிரி இது காட்டுக்குள் நடக்கிற போட்டி. இதில் கலந்து கொள்கிறவர்களை ஒரு தீவில் உள்ள அடர்ந்த காட்டுக்குள் இறக்கி விட்டு விடுவார்கள். அந்த அடர்ந்த காட்டுக்குள் யார் 100 நாட்கள் வரை தாக்குபிடித்து நிற்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். எலிமினேட் ஆகிறவர்களை ஹெலிகாப்படரில் வந்து அழைத்து போய்விடுவார்கள்
15 முதல் 20 போட்டியாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள். உணவு, தண்ணீர், தங்குமிடம் என அனைத்து அடிப்படைத் தேவைகளையும் போட்டியாளர்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும். போட்டியாளர்களுக்கு பல வித டாஸ்குகள் கொடுக்கப்படும். அதிலும் அவர்கள் ஜெயிக்க வேண்டும். தற்போது போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு உடல் பரிசோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.