சிவகார்த்திகேயனுடன் பேசுவதைத் தவிர்த்தாரா விஜய் ? | லோகா வாய்ப்பை மறுத்தீர்களா ? கேள்வியால் டென்ஷனான பார்வதி | பிளாஷ்பேக்: கலைஞர்கள் பேசாமல், பார்வையாளர்கள் பேசிய மவுனத் திரைப்படம் “பேசும்படம்” | 15 ஆண்டுகளுக்குபின் மங்கத்தா ரீ ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் போடும் திட்டம் | சென்சார் சான்றிதழ் வரலையா : டென்ஷனில் பராசக்தி, ஜனநாயகன் குழு | ஓமனில் டிரக்கிங் சென்ற பாடகி சித்ரா ஐயரின் சகோதரி உயிரிழப்பு | பாலா தயாரிப்பில் படம் இயக்கப் போகும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்? | இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? |

விஜய் டிவியில் குழந்தைகளுக்கான புதிய ரியாலிட்டி ஷோவாக தெறி பேபி ஒளிப்பரப்பாக உள்ளது. இதை வீஜே ரக்ஷ்னுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்க உள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு அடுத்தபடியாக ரியாலிட்டி ஷோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் காரணமாகவே சீரியல்களை தாண்டி ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதிலும் முன்னணி தொலைக்காட்சிகளுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவி வருகிறது.
ஒரு ரியாலிட்டி ஷோவின் வெற்றிக்கு அதை தொகுத்து வழங்கும் வீஜேக்களின் பங்கு முக்கியமானது. சிவ கார்த்திகேயன், டிடி, தீபக், ரம்யா தொடங்கி பலர் தாங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்துள்ளனர்.
அந்த வகையில் திருமணத்துக்கு பின் வீஜே வேலைக்கு ஓய்வு கொடுத்த மணிமேகலை, மீண்டும் வீஜே ஆகுமாறு அவர்கள் ரசிகர்கள் நச்சரித்து வந்தனர். அவரும் மீண்டும் வீஜே ஆகும் விருப்பத்தையும், ரக்ஷனுடன் இணைந்து பணிபுரியும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். அவரது விருப்பத்திற்கு செவி சாய்த்துள்ள டிவி நிர்வாகம் இந்த கலாட்டாவான காம்போவினை குழந்தைகள் ஷோவில் களமிறக்கியுள்ளது. குழந்தைகளின் சுட்டித் தனத்துடன் தெறிக்க விட வருகிறது இந்த புதிய காம்போ.




