சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பெங்களூரை சேர்ந்தவர் ரக்சிதா மகாலட்சுமி. பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு சரவணன் மீனாட்சியில் நடித்து புகழ்பெற்றார். தொடர்ந்து பல தொடர்களில் நடித்தார். நாம் இருவர் நமக்கு இருவர் தொடரிலும் நடித்தார்.
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மாற்றுத்திறனாளி ஒருவர் இவரது தீவிர ரசிகராக இருந்துள்ளார். அவர் ரக்சிதாவை சந்திக்கும் ஆசையில் இருந்திருக்கிறார். இதனை அவரது குடும்பத்தினர் மூலம் அறிந்து கொண்ட ரக்சிதா, அந்த ரசிகரின் வீட்டுக்கு சர்ப்ரைசாக சென்று தனது அன்பை வெளிப்படுத்தினார். அவருக்கு புத்தாடைகளும், இனிப்பும் வழங்கினார். இந்த வீடியோ தற்போது வெளியாக வைரலாக பரவி வருகிறது.




