நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. கடந்த ஒரு ஆண்டாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விஜய் அவார்டையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த பவித்ராவும், வினோதினி என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த வைஷாலியும் விலகியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு நடிகைகள் விலகி இருப்பது ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைஷாலிக்கு உடல்நல பிரச்சினை இல்லை என்றும், அவர் 3 மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. பவித்ரா இதே சேனலில் ஒளிபரப்பாகும் இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இருவர் விலகினாலும் அவர்கள் நடித்து வந்த கேடக்டர்கள் தொடர்கிறது. இவர்களுக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிப்பார்கள் என்கிறது சீரியல் தரப்பு. வைஷாலி, பவித்ரா இடத்தை புதியவர்கள் நிரப்புவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.