இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நட்சத்திர நிகழ்ச்சி சொல்வதெல்லாம் உண்மை. குடும்ப பிரச்சினைகளை ஒரு தொகுப்பாளர் நடுவராக இருந்து தீர்த்து வைக்கும் நிகழ்ச்சி. பக்கத்து வீட்டு பிரச்சினைகளை உற்றுப்பார்க்கும் மனோரீதியான உணர்வுதான் இந்த நிகழ்ச்சிக்கு அடிப்படை ஆதாரம்.
2000-மாது ஆண்டில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அன்றைய பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி. இந்த நிகழ்ச்சி பெண்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சியை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிர்மலா பெரியசாமியை விட லட்சுமி ராமகிருஷ்ணனின் அணுகுமுறை இன்னும் பிரபலமானது. "என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...." "போலீசை கூப்பிடுவேன்..." என்று லட்சுமி ராமகிருஷ்ணன் அடிக்கடி சொல்லும் வாக்கியங்கள். வைரலாக பிரபலமானது.
போட்டி சேனல்கள் இந்த நிகழ்ச்சியை கிண்டல் செய்ததன் மூலம் நிகழ்ச்சி இன்னும் பிரபலமானது. இந்த நிகழ்ச்சி நடக்கும்போதே சேனல் ஊழியர்கள் தாக்கப்பட்டதும். அவர்கள் போராட்டம் நடத்தியதுமான நிகழ்வுகளும் நடந்தது. குடும்ப விவகாரத்தை வீதிக்கு கொண்டு வருவதா என்ற விமர்சனங்கள் இந்த நிகழ்ச்சி மீது இருந்தாலும் கொலைகள் உள்பட மறைக்கப்பட்ட பல குற்றச் செயல்ககளை இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
இடையில் சேனலுடன் கருத்து வேறுபாடு கொண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை நடிகை சுதாசந்திரன் நடத்தினார் ஆனால் அது எடுபடவில்லை. அதனால் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனே நடத்த தொடங்கினார். தற்போது 7 ஆண்டை கடந்து புதிய பொலிவுடன் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி உள்ளது.




