'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

விஜய் டி.வியில் நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் ராஜா ராணி. இது பணக்கார வீட்டுக்கு வேலைக்குச் சென்று அந்த வீட்டின் மருமகளாகி அதனால் ஏற்படும் பிரச்சினைகளை அந்தப் பெண் சமாளிப்பது மாதிரியான கதை. செம்பருத்தி, கார்த்தி என்ற இரு கேரக்டர்களை மையமாக கொண்டு காதலும், குடும்ப மோதலும் கலந்து உருவாகி வருகிறது. சரவணன் மீனாட்சி தொடரை இயக்கிய பிரவீன் பென்னட் இயக்குகிறார்.
இதில் செம்பருத்தியாக நடிப்பவர் ஆலியா மானசா. இவர் தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியில் இறுதிச்சுற்று வரை வந்தவர். சமீபத்தில் வெளியான ஜூலியும் 4 பேரும் படத்தில் ஹீரோயினாக நடித்தார். கதிராக நடிப்பார் திரைப்பட நடிகர் சஞ்சீவ். இவர் குளிர் 100 டிகிரி படத்தில் அறிமுகமாகி அதன்பிறகு நீயும் நானும், சகாக்கள், குறும்புக்கார பசங்க, நண்பர்கள் கவனத்திற்கு, உயிருக்கு உயிராக படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள ஆங்கில படம் என்ற படம் வெளிவர இருக்கிறது. இந்த நிலையில் சின்னத்திரைக்கு வந்திருக்கிறார் சஞ்சீவ்.




