நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

வெள்ளித்திரை நடிகையான நளினி தற்போது சின்னத்திரையில் பல சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார். சில காலத்திற்கு முன் வெள்ளித்திரையிலும் வாய்பிழந்து தவித்த அவர் குட்டி பத்மினி தயாரித்த கிருஷ்ணதாசி சீரியல் தான் தனக்கு மறுபிறவி தந்ததாக கூறியிருக்கிறார். கிருஷ்ணதாசி தொடர் அந்த நேரத்தில் பலருக்கும் பேவரைட்டான தொடராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் வாழ்க்கையில் பல கடினமான சூழலில் அவதிப்பட்டு வந்த நளினிக்கு கிருஷ்ணதாசி சீரியல் தான் சின்னத்திரையில் நல்லதொரு அறிமுகத்தை கொடுத்தது. அப்போது முதல் இப்போது வரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக நடித்து வரும் நளினி, கிருஷ்ணதாசி தொடரில் தனக்கு வாய்ப்பளித்த குட்டி பத்மினிக்கு பலமுறை தனது நன்றியினை காணிக்கையாக்கியுள்ளார்.