பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடர் சூப்பர் ஹிட்டானது. அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணம் வில்லன் கதாபாத்திரத்தில் ஆதியாக நடித்த அஜய் கபூரும் ஒருவர் சொல்லலாம். இதனை தொடர்ந்து எதிர்நீச்சல் தொடரிலும் மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருந்தார் திருச்செல்வம். ஆனால், அந்த தொடரில் தவிர்க்க முடியாத காரணங்களால் சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீசன் 2 அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையில் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பல புதிய கதாபாத்திரங்களும், நடிகர்களும் அறிமுகமாகியுள்ள இந்த தொடரில் கோலங்கள் ஆதியும் நடிக்க இருக்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதற்கு காரணம் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் பிரியதர்ஷினி அஜய் கபூருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே, ஆதி-திருச்செல்வம் காம்போ எதிர்நீச்சல் 2விலும் தொடருமா? என பல ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.