ட்வின்ஸை வரவேற்க தயாராகும் ராம்சரண், உபாசனா தம்பதி | முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி. வெற்றிகரமாக இரண்டு சீசன்களை முடிந்த இந்த தொடரின் முதல் சீசனில் ஆல்யாவும், சஞ்சீவும் நடித்திருந்தனர். தற்போது சஞ்சீவ் - கயல் தொடரிலும், ஆல்யா - இனியா தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து ஆல்யாவும், சஞ்சீவ்வும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் ஆல்யா, சஞ்சீவ் மற்றும் இயக்குநர் பிரவீன் பென்னட் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ராஜா ராணி 3க்கு காத்திருங்கள் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.




