சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
தமிழில் ஒளிபரப்பான அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சரி. மஞ்சரிக்கு தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் மஞ்சரி சிங்கப்பூரில் வசித்து வந்தார். சீரியல் ஷூட்டிங் பொழுதுகளில் மட்டும் தமிழகம் வந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ள அவர், மொட்டத்தலையுடன் காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேட்ட போது, 'சிங்கப்பூரில் குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தலைமுடி உதிர்ந்துவிடும். அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். நானும் வருடத்திற்கு ஒரு முறை எனது முடியை அந்த குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மஞ்சரியின் இந்த செயலை தற்போது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.