ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
தமிழில் ஒளிபரப்பான அண்ணாமலை, கோலங்கள், மந்திரவாசல் உள்ளிட்ட சில தொடர்களில் நடித்து பிரபலமானவர் மஞ்சரி. மஞ்சரிக்கு தமிழ் சின்னத்திரை நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த போதிலும் அவர் தொடர்ந்து சீரியலில் நடிக்கவில்லை. அதற்கு காரணம் மஞ்சரி சிங்கப்பூரில் வசித்து வந்தார். சீரியல் ஷூட்டிங் பொழுதுகளில் மட்டும் தமிழகம் வந்து நடித்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு ஊடகத்தில் பேட்டி கொடுத்துள்ள அவர், மொட்டத்தலையுடன் காட்சியளிக்கிறார். இதற்கு காரணம் என்ன? என்று அவரிடம் கேட்ட போது, 'சிங்கப்பூரில் குழந்தைகள் கேன்சர் சொசைட்டி உள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் போது தலைமுடி உதிர்ந்துவிடும். அவர்களுக்கு நிறையபேர் முடியை தானமாக கொடுப்பார்கள். நானும் வருடத்திற்கு ஒரு முறை எனது முடியை அந்த குழந்தைகளுக்கு டொனேஷன் செய்து வருகிறேன்' என்று கூறியுள்ளார். மஞ்சரியின் இந்த செயலை தற்போது பலரும் வாழ்த்தி வருகின்றனர்.